ஸகாதுல் பித்ர் இபாதத்களில் ஒன்றாகவும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறிய வணக்கமான நோன்புடன் இணைந்துள்ள ஒர் வணக்கமும் கூட. அல்லாஹ் நோன்பு பற்றிக் கூறும்போது “நோன்பு எனக்குரியது நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.
சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்.
ஸகாதுல் பித்ர், ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமளான் மாதம் நோன்புப் பெருநாளைக்கு இரு தினங்களுக்கு முன் கடமையாக்கப் பட்ட ஒரு வணக்கமாகும். இது பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரவான், ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)அவர்கள் ஸகாதுல் பித்ர் கடமையானவர், ஸகாதின் நிஸாபை அடைந்தவராகவும் தனது வீடு, வாகனம், பாதுகாப்புத் தேவை என்பன பூர்த்தியான வராகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர்களுக்குமான உணவுத் தேவை போக மீதமாக உள்ளவர் கொடுக்க வேண்டும் என்ற கருத்தே பொதுவாக ஏற்றுக்க கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்னு உமர் (ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பு முன்வைக்கப்படுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ ஈத்தம் பழம் அல்லது ஒரு ஸாஃ பார்லி விதை போன்றவற்றிலிருந்து கொடுக்குமாறு முஸ்லிம்களிலுள்ள அடிமைகள், சுதந்திரவான்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவர்மீதும் விதியாக்கினார்கள்”. ஆதனை மனிதர்கள் தொழுகைக்குப் போக முன்னர் பொடுப்பதுதான் அதிகம் கூலி கிடைக்கக் கூடியது ( புகாரி, முஸ்லிம்)
ஸகாதுல் பித்ர் இஸ்லாமிய ஷரியாவில் உள்ள ஒன்று என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளா விடினும் அதன் சட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாமறிந்ததே.
யாருக்காகக் கொடுப்பது?
தனக்காகவும் தனது பொறுப்பின் கீழுள்ள தனது குடும்பம், மனைவி, பணியாளர்கள் ஆகியோருக்கும் கொடுக்க வேண்டும். மனைவிக்குக் கொடுப்பது கடமையில்லை என இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகின்ற போதிலும் “ நீங்கள் ஸகாதுல் பித்ரை நீங்கள் உணவளிப்போருக்குக் கொடுங்கள்” என தாருக் குத்னியில் ஒரு அறிவிப்புப் பதிவாகியுள்ளது. இதன் பிரகாரம் மனைவிக்காகவும் கொடுப்பது கடமையானது என இமாம்கள் கூறுகின்றனர்.
யாருக்குக் கொடுப்பது?
ஷாபி மத்ஹபின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஸகாத் பெறத்தகுதி பெற்ற எட்டுக் கூட்டத்தினருகு;கும் கொடுக்கப்பட முடியும். ஏனைய மூன்று இமாம் களும் ஒரு ஏழைக்குக் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர். அதேபோல் ஜமாதாக இணைந்து ஒரு ஏழைக்குக் கொடுப்பதுதையும் ஆகுமாக்குகின்றனர். இக்கருத்தோடு ஷாபிஈ மத்ஹப்பைச் சேர்ந்த சிலர் இமாம்களும் உடன்படுகின்றனர்.
ஸகாதுல் பித்ர் கூட்டாகக் கொடுப்பது மிக வரவேற்கத்தக்க அமசமாகும். ஸகாத் வஸ_லிக்கப்பட்டு பொருத்தமானவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுபோல் இதையும் அறவிட்டு உணவுப் பொதிகளாகத் தயாரித்து, Nதைவை உடையவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமாயின் ஒரு வருக்கு இரு முறை கிடைக்கும் சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டு, தேவையுடையவர்கள் அனைவருக்கும் ஸகாதுல் பித்ர் கிடைப்பதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஸகாதுல் பித்ர் கூட்டாகக் கொடுப்பது மிக வரவேற்கத்தக்க அமசமாகும். ஸகாத் வஸ_லிக்கப்பட்டு பொருத்தமானவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுபோல் இதையும் அறவிட்டு உணவுப் பொதிகளாகத் தயாரித்து, Nதைவை உடையவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமாயின் ஒரு வருக்கு இரு முறை கிடைக்கும் சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டு, தேவையுடையவர்கள் அனைவருக்கும் ஸகாதுல் பித்ர் கிடைப்பதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதேபோல் பாட்டன் பாட்டி, பேரன்கள் போன்ற செலவு செலவழிப்பதற்குக் கடமையற்றோருக்குக் கொடுக்கலாம் என்றும் கூறுகின்றனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் சகோதரன்,சாச்சா, மாமி உறவிலுள்ளோர்களுக்குக் கொடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ள அதேவேளை, இமாம் மாலிக், இமாம் ஷபிஈ ஆகியோர் இது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எவ்வாறாயினும் காபிர்களுக்குக் கொடுக்கப்படக் கூடாது.
ஸகாதுல் பித்ராவை ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்துவதில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) – நெருங்கிய உறவினர் இருந்தால் அல்லது தனது பிரதேசத்தை விட அடுத்த பிரதேசம் அதிக தேவையுடயதாக இருந்தால் நகர்த்தலாம். வேறு சந்தர்ப்பங்களில் நகர்த்துவது மக்ரூஹ்
இமாம் மாலிக் - இமாமின் முடிவின்றி நகர்த்தக் கூடாது.
இமாம் ஷபிஈ - இவரின் பிரபல்யமான கருத்து நகர்த்தக் கூடாது.
இமாம் ஹன்பல் - பிரதேசத்தில் தேவையுடயோர் இருக்க கஸ்ரு செய்யும் அளவுகூட நகர்த்தக் கூடாது.
இதிலிருந்து அவதானிக்கக் கூடிய விடயம் ஏதாவது அதிமுக்கிய சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நகர்த்தக் கூடாது என்பதாகும்.
கொடுக்கப்படும் நேரம்?
பெருநாள் தினத்தன்று பஜ்ருக்குப் பின்னர், பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும். எனினும் பெருநாளைக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொடுப்பதும் ஆகுமானது என்னற கருத்தும் காணப்படுகிறது. புகாரியில் வருகின்ற ஒரு அறிவிப்பு “ நபி (ஸல்) அவர்கள் பெரு நாளைக்கு ஒரு தினத்திற்கு முன்னர் அல்லது இரு தினங்களுகு;கு முன்னர் கொடுப்பவராக இருந்தார்கள் என வந்துள்ளது”. அனால் தொழுகைக்குப் பின் கொடுப்பது தடுக்கப்பட்ட தாகும்.
அளவும் கொடுக்கப்படும் பொருளும் ?
கோதுமை, பார்லி, அரிசி, ஈத்தம்பழம், காய்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி ஆகிய ஐந்து உணவுப் பொருட்களும் உணவாகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்தில் இவற்றிலிருந்து ஸகாதுல் பித்ர் கொடுக்கலாம் என அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இமாம் ஷாபிஈ அவர்கள் அரிசி.கோதுமை, தானியம் போன்ற உணவுக்காகப் பயன்படுத்தும் அனைத்திலிருந்தும் கொடுக்கப்பட முடியும் எனக் கருதுகிறார்.
அதேவேளை ஸகாதுல் பித்ராவின் பெறுமதியை நாணமாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா ( அவர்கள் ) கொண்டுள்ளார். இதே கருத்தை பிப்பட்ட கால ஷாபிஈ மத்ஹப்பைச் சோந்த அறிஞர்களும் கொண்டுள்ளனர்.
அதேவேளை ஸகாதுல் பித்ராவின் பெறுமதியை நாணமாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா ( அவர்கள் ) கொண்டுள்ளார். இதே கருத்தை பிப்பட்ட கால ஷாபிஈ மத்ஹப்பைச் சோந்த அறிஞர்களும் கொண்டுள்ளனர்.
இதன் அளவப் பொறுத்தவரை ஹதீஸில் ஒரு ஷாஃ என்று வந்துள்ளதை அவதானிக்கலாம். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட ஐந்து வகையான பொருட்களிலும் ஒரு ஷாஃ கொடுப்பது கடமையாகும். ஒரு ஷாஃ என்பது நவீன அளவியலின் படி எவ்வளவு என்பது இன்று அனைவரின் மத்தியிலும் உள்ள கேள்வியாகும். ஆதைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.
ஒரு ஷாஃ கோதுமை 2.176kg
ஒரு ஷாஃ அரிசி 2.520kg
ஒரு ஷாஃ பருப்பு 2.185kg
ஒரு ஷாஃ பார்லி 2.250kg
எவ்வாறாயினும் 2.5 kg அல்லது அதைவிடக் கூடுதலான பெறுமதியான உணவுப் பொருளையோ அல்லது அதற்கு நிகரான பணப் பெறுமதியையோ வழங்குவது சிறந்ததாகக் காணப்படுகிறது.
கடமையாக்கப்பட்டதன் பின்னணியும் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும்.
1. நோன்பில் தெரியாமல் நிகழ்த தவற்ருகளைச் நீக்குவதற்காகக் கடமையாக்கப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியை கேளிக்கைகள், தவறான வார்த்தைகள் என்பவற்றிலிருந்து தூமைப்படுத்தும் வகையில் ஸகாதுல் பித்ராவைக் கடமையாக்கினார்கள’
கடமையாக்கப்பட்டதன் பின்னணியும் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும்.
1. நோன்பில் தெரியாமல் நிகழ்த தவற்ருகளைச் நீக்குவதற்காகக் கடமையாக்கப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியை கேளிக்கைகள், தவறான வார்த்தைகள் என்பவற்றிலிருந்து தூமைப்படுத்தும் வகையில் ஸகாதுல் பித்ராவைக் கடமையாக்கினார்கள’
2. ஏழைகள், மிஸ்கீன்களுக்கு அந்நாளின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக அமைகிறது.
அந்நாளில் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கையேந்துகின்ற ஏழைகள், மிஸ்கீன்கள் என்போர் ஏனைய முஸ்லிம்கள் போல் சந்தோசமாக தமது பெருநாளைக் களிக்க இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.
3. நோன்பு அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது.
ஜரீர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘ரஸல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ரமளானின் நோன்பு வானுக்கும் பூமிக்குமிடையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஸகாதுல் பித்ரின் மூலம் தான் உயர்த்ப்படுகிறது”.
4. நோன்பல்லாத காலங்களிலும் வாரி வழங்கக் கூடிய சிந்தனையையும் பயிற்சியையும் இது ஏற்படுத்துகிறது.எனவே நோன்பில் கடமையாக்கப்பட்ட ஸகாதுல் பித்ரா என்ற கடமையை உரிய முறையில் நிறை வேற்றுவதனூடாக அல்லாஹ்வின் கட்டளையையும் அவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றியவர்களாகவும் இறைதிருப்தியைப் பெற்று நாளை மறுமையில் எல்லோரும் அவாக் கொண்டுள்ள சுவனத்தை அடைய எம்மை எதிர்நோக்கும் ரமளானில் முயற்சிப்போம்.







1 comments:
wow nalla iruku ungal muyetchi kaikudattum
barakallah
faizal Ameer film director
http://isnw.blogspot.com/
Post a Comment